states

img

உ.பி., பாஜக அரசு அடாவடி சம்பல் பகுதிக்கு செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜமா மசூதி இந்துக் கோவிலை இடித்து கட்டப்பட்டுள்ளது என மாநில வருவாய் அதிகாரிகள் ஆய்வுக் குச் சென்றனர். அவர் களுடன் இந்துத்து வா கும்பலும் சென் றது. இந்த ஆய்வுக்கு  முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதனால் ஜமா மசூதி பகுதி யில் வன்முறை வெடித்தது. இதில் 5 பேரை உத்தரப்பிரதேச போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில், வன்முறை நடந்த சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப்பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற் பட்டது. சம்பல் பகுதியில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து புதன்கிழமை காலை ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தியை மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தியது உத்தரப்பிரதேச காவல்துறை. தில்லி – மீரட் நெடுஞ்சாலையில் உள்ள காஜிப்பூர் எல்லையிலேயே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம்.பி.,உள்ளிட்டோர் வந்த கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் ராகுல் காந்தி சம்பல் பகுதி க்குச் செல்லாமலேயே தில்லிக்கு திரும்பி னார். ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய தற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.